நேர்மையாக வாக்களிப்போம் - பொதுமக்கள் கையெழுத்து
தஞ்சாவூரில் அனைவரும் நேர்மையாக வாக்களிக்க வலியுறுத்தி கையெழுத்து இயக்கத்தை கலெக்டர் கோவிந்தராவ் தொடங்கி வைத்தார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்காக தேர்தல் ஆணையம் சார்பாக பல்வேறு கட்ட பணிகள் செய்யப்பட்டு வருகிறது. 100% வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் அனைத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது. அனைவரும் வாக்குக்கு பணம் வாங்காமல் வாக்களிக்க வேண்டும் என பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் செய்யப்பட்டு வருகிறது.
அதே போல் அனைவரும் நேர்மையாக வாக்களிக்க வேண்டும், பணம் வாங்கி கொண்டு வாக்களிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் கலெக்டர் கோவிந்தராவ் மற்றும் மாவட்ட எஸ்பி., தேஷ்முக் சேகர் சஞ்சய் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தனர். இந்த கையெழுத்து இயக்கத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு நேர்மையாக வாக்களிப்போம் என கையெழுத்திட்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.