Begin typing your search above and press return to search.
தென்காசி காவல்துறையினருக்கு சேமநலநிதி வழங்கிய மாவட்ட கண்காணிப்பாளர்
தென்காசியில், 28 காவல்துறையினருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ், சேமநல நிதியை வழங்கினார்.
HIGHLIGHTS
தென்காசி மாவட்டத்தில் பணிபுரிந்து, காவலர் சேமநலநிதி (TNPBF) உதவித்தொகை வேண்டி, காவல் அதிகாரிகள், காவல் ஆளிநர்கள் மற்றும் மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரியும் உதவியாளர்கள் மனு சமர்ப்பித்திருந்தனர். அவர்களில் 28 பேருக்கு, தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து, காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் உதவித்தொகையை வழங்கினார்.
இந்த உதவித்தொகை, பணியின் போது உயிரிழந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் குடும்பத்திற்கும், குடும்பத்தினரின் இறப்பிற்கான ஈமசடங்கு நிவாரண நிதியும், உடல்நலக்குறைவால் மருத்துவ சிகிச்சை பெற்ற நபர்களுக்கும் வழங்கப்பட்டது.