யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு: முதல் இடம் பிடித்த தென்காசி மாணவி
தென்காசியைச் சேர்ந்த சண்முகவள்ளி யுபிஎஸ்சி தேர்வில் இந்திய அளவில் 108வது இடத்தை பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
HIGHLIGHTS
தென்காசி அலங்கார் நகரைச் சேர்ந்த ஈஸ்வர ராஜ்-கோமதி இவர்களின் மகள் சண்முகவள்ளி. பிஇ பட்டதாரியான இவர் 2020 ல் நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் 108 வது இடத்தையும், தமிழக அளவில் 3வது இடத்தையும், பெண்கள் பிரிவில் தமிழகத்தில் முதல் இடத்தையும் பிடித்துள்ளார். தொடக்கப்பள்ளியை தென்காசி எம்கேவிகே பள்ளியிலும், குற்றாலம் ஸ்ரீபராசக்தி வித்யாலயாவில் 10ம் வகுப்பையும், உயர்நிலைப் படிப்பை இலஞ்சி பாரத் மாண்டிச்சோரியில் முடித்தார். சென்னை அண்ணா பல்கலக்கழகத்தில் பிஇ படித்த சண்முகவள்ளி கல்லூரியில் தங்கப்பதக்கம் பெற்று சாதனை புரிந்தார். தமிழக அரசு நடத்தும் சிவில் சர்வீஸ் பயிற்சி அகாடமி மற்றும் மனிதநேயம் ஐஏஎஸ் அகாடமியில் சிவில் சர்வீஸ் தேர்வுக்கான பயிற்சியை முடித்தார். தனது 3 வது முயற்சியில் இந்திய அரசு நடத்திய சிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் 108வது இடத்தை பிடித்து சாதனை புரிந்துள்ளார்.