தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மரம் நடு விழா
தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மரம் நடு விழா நடைபெற்றது.
HIGHLIGHTS
தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உலக பூமி தினத்தை முன்னிட்டு மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் இரா ஜெஸ்லின் அவர்கள் தலைமையில் சுமார் 500 மரக்கன்றுகள் மற்றும் அலங்கார செடிகள் நடப்பட்டன .
மருத்துவமனைக்கு தேவையான அனைத்து மரக்கன்றுகளை தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர், பசுமை தென்காசி இயக்கம் , தென்காசி 9 வது வார்டு கவுன்சிலர் , இணைந்து மருத்துவமனைக்கு வாகை மரக்கன்றுகள் , அலங்கார செடிகள் மற்றும் இயற்க்கை உரம் போன்றவற்றை ஏற்பாடு செய்து கொடுத்தார் . மேலும் நகர்மன்ற தலைவர் அவர்களிடம் மருத்துவமனை வளாகம் முழுவதும் இயற்கை சோலையாக மாற்றுவதற்கான வழிவகை செய்வதற்கான கோரிக்கையினையும் வைத்துள்ளார் .
இந்நிகழ்ச்சியில் உறைவிட மருத்துவர் ராஜேஷ் , செவிலியர் கண்காணிப்பாளர்கள் திருமதி பத்மா , திருப்பதி , திருமதி முத்துலட்சுமி மற்றும் மருத்துவமனையில் பணிபுரியும் பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர் . இவர்களுடன் 9 வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் நாகூர்மீரான்,1 வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் சுல்தான் ஷெரிப் காமில், "பசுமை தென்காசி " முகமது முஸ்தபா,13 வது நகராட்சி நடுநிலைப் பள்ளி ஆசிரியர் இரா.வின்சென்ட், , ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர் இள.பாபுவேலன் , சாரல் ரத்த தான கழகம் அன்சாரி, பசுமை இலத்தூர் கனகராஜ், சண்முக ராஜ் அனைவரும் கலந்து கொண்டனர் .
மருத்துவமனைக்கு தேவையான மரக்கன்றுகளை வழங்கி நட்டு கொடுத்த அனைவருக்கும் பொதுமக்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகம் சார்பாக மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் நன்றியினையும் பாராட்டிகளையும் தெரிவித்தார்.