/* */

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மரம் நடு விழா

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மரம் நடு விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மரம் நடு விழா
X

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உலக பூமி தினத்தை முன்னிட்டு  சுமார் 500 மரக்கன்றுகள் மற்றும் அலங்கார செடிகள் நடப்பட்டன .

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உலக பூமி தினத்தை முன்னிட்டு மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் இரா ஜெஸ்லின் அவர்கள் தலைமையில் சுமார் 500 மரக்கன்றுகள் மற்றும் அலங்கார செடிகள் நடப்பட்டன .

மருத்துவமனைக்கு தேவையான அனைத்து மரக்கன்றுகளை தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர், பசுமை தென்காசி இயக்கம் , தென்காசி 9 வது வார்டு கவுன்சிலர் , இணைந்து மருத்துவமனைக்கு வாகை மரக்கன்றுகள் , அலங்கார செடிகள் மற்றும் இயற்க்கை உரம் போன்றவற்றை ஏற்பாடு செய்து கொடுத்தார் . மேலும் நகர்மன்ற தலைவர் அவர்களிடம் மருத்துவமனை வளாகம் முழுவதும் இயற்கை சோலையாக மாற்றுவதற்கான வழிவகை செய்வதற்கான கோரிக்கையினையும் வைத்துள்ளார் .

இந்நிகழ்ச்சியில் உறைவிட மருத்துவர் ராஜேஷ் , செவிலியர் கண்காணிப்பாளர்கள் திருமதி பத்மா , திருப்பதி , திருமதி முத்துலட்சுமி மற்றும் மருத்துவமனையில் பணிபுரியும் பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர் . இவர்களுடன் 9 வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் நாகூர்மீரான்,1 வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் சுல்தான் ஷெரிப் காமில், "பசுமை தென்காசி " முகமது முஸ்தபா,13 வது நகராட்சி நடுநிலைப் பள்ளி ஆசிரியர் இரா.வின்சென்ட், , ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர் இள.பாபுவேலன் , சாரல் ரத்த தான கழகம் அன்சாரி, பசுமை இலத்தூர் கனகராஜ், சண்முக ராஜ் அனைவரும் கலந்து கொண்டனர் .

மருத்துவமனைக்கு தேவையான மரக்கன்றுகளை வழங்கி நட்டு கொடுத்த அனைவருக்கும் பொதுமக்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகம் சார்பாக மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் நன்றியினையும் பாராட்டிகளையும் தெரிவித்தார்.

Updated On: 27 April 2022 6:19 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...