தென்காசி மாவட்டத்தில் நாளை வாக்குப் பதிவு: மாவட்ட தேர்தல் பார்வையாளர் நேரில் ஆய்வு
ஊரக உள்ளாட்சி தேர்தல்: வாக்குச்சாவடிக்கு அனுப்பும் பணியினை மாவட்ட தேர்தல் பார்வையாளர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு.
HIGHLIGHTS
ஊரக உள்ளாட்சி தேர்தல் : முதற்கட்ட வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்களை வாக்குச்சாவடிக்கு அனுப்பி வைக்கும் பணியினை மாவட்ட தேர்தல் பார்வையாளர் சங்கர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு .
தென்காசி மாவட்டத்தில் 5 ஊராட்சி ஒன்றியங்களுக்கு முதல் கட்டமாக நாளை (06.10.2021) அன்று ஆலங்குளம், கடையம், கீழப்பாவூர், மேலநீலிதநல்லூர் மற்றும் வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியங்களுக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது.
அதனை முன்னிட்டு இன்று 72 வகையான வாக்குச்சாவடிகளுக்கு, தேவையான பொருட்கள் வாகனங்களில் இன்று அனுப்பப்படுகிறது. வாக்குப்பதிவிற்கு தேவையான வாக்கு ச்சீட்டுகள், வாக்குப் பெட்டிகள், பேனா, சணல், சாக்கு, பசை, அரக்கு, மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, நாடா, ஊசி, உலோக சட்டம் உள்ளிட்ட 72 வகையான பொருட்கள் தென்காசி மாவட்டத்தில் 5 ஊராட்சி ஒன்றியங்களில் தயார் நிலையில் உள்ளன.
இந்த பொருட்களை ஏற்றிச்செல்ல வாகனங்கள் கொண்டு வரப்பட்டது. இந்த வாகனங்களை பலதத் போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களுக்கு அனுப்பட்டன. தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூலம் மண்டல அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வாக்குச்சாவடிகளுக்கு எடுத்து செல்லப்படுகிறது.