/* */

தென்காசி மாவட்டத்தில் நாளை வாக்குப் பதிவு: மாவட்ட தேர்தல் பார்வையாளர் நேரில் ஆய்வு

ஊரக உள்ளாட்சி தேர்தல்: வாக்குச்சாவடிக்கு அனுப்பும் பணியினை மாவட்ட தேர்தல் பார்வையாளர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு.

HIGHLIGHTS

தென்காசி மாவட்டத்தில் நாளை வாக்குப் பதிவு: மாவட்ட தேர்தல் பார்வையாளர் நேரில் ஆய்வு
X

தென்காசியில் முதற்கட்ட வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்களை வாக்குச்சாவடிக்கு அனுப்பி வைக்கும் பணியினை மாவட்ட தேர்தல் பார்வையாளர் சங்கர் நேரில் ஆய்வு செய்தார்.

ஊரக உள்ளாட்சி தேர்தல் : முதற்கட்ட வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்களை வாக்குச்சாவடிக்கு அனுப்பி வைக்கும் பணியினை மாவட்ட தேர்தல் பார்வையாளர் சங்கர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு .

தென்காசி மாவட்டத்தில் 5 ஊராட்சி ஒன்றியங்களுக்கு முதல் கட்டமாக நாளை (06.10.2021) அன்று ஆலங்குளம், கடையம், கீழப்பாவூர், மேலநீலிதநல்லூர் மற்றும் வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியங்களுக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது.

அதனை முன்னிட்டு இன்று 72 வகையான வாக்குச்சாவடிகளுக்கு, தேவையான பொருட்கள் வாகனங்களில் இன்று அனுப்பப்படுகிறது. வாக்குப்பதிவிற்கு தேவையான வாக்கு ச்சீட்டுகள், வாக்குப் பெட்டிகள், பேனா, சணல், சாக்கு, பசை, அரக்கு, மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, நாடா, ஊசி, உலோக சட்டம் உள்ளிட்ட 72 வகையான பொருட்கள் தென்காசி மாவட்டத்தில் 5 ஊராட்சி ஒன்றியங்களில் தயார் நிலையில் உள்ளன.

இந்த பொருட்களை ஏற்றிச்செல்ல வாகனங்கள் கொண்டு வரப்பட்டது. இந்த வாகனங்களை பலதத் போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களுக்கு அனுப்பட்டன. தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூலம் மண்டல அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வாக்குச்சாவடிகளுக்கு எடுத்து செல்லப்படுகிறது.

Updated On: 5 Oct 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  5. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  6. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  7. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  8. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  9. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு