/* */

தென்காசி: உள்ளாட்சித்தேர்தலில் கெத்து காட்டும் கிராமப்புற இளைஞர்கள்

தென்காசியில், உள்ளாட்சி தேர்தல்களம் சூடுபிடிக்கும் சூழலில், இளைஞர்கள் நூதன பிளக்ஸ் வைத்து, அரசியல்வாதிகளை மிரள வைக்கின்றனர்.

HIGHLIGHTS

தென்காசி: உள்ளாட்சித்தேர்தலில் கெத்து காட்டும் கிராமப்புற இளைஞர்கள்
X

இளைஞர்கள் வெளியிட்டுள்ள நூதன அறிவிப்பு.

தென்காசி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல். சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இங்கு தேர்தல், 06.10.2021 தேதி ஆலங்குளம், கீழப்பாவூர், கடையம், மேலநீலிதநல்லூர், வாசுதேவநல்லூர் ஆகிய ஒன்றியங்களுக்கு முதல் கட்டமாகவும், 9.10.2021 அன்று தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், சங்கரன்கோவில், குருவிகுளம் ஆகிய ஒன்றியங்களுக்கு இரண்டாம் கட்டமாகவும் தேர்தல் நடைபெற உள்ளது. நேற்று வரை 1473 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில் தேர்தல் களத்தில் பல்வேறு சுவாரஸ்யமான சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றன. கீழப்பாவூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆவுடையனூர் ஊராட்சியில், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இந்த ஊராட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக ஊராட்சிமன்ற செயலரை பணியிட மாற்றம் செய்துள்ளனர். இதனால் விழிப்படைந்த கிராம இளைஞர்கள் வித்தியாசமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில், "தங்கள் ஊராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களின் கவனத்திற்கு: ஊராட்சியில் வெற்றிபெற்று பொது நிதியை எடுத்து தேர்தல் செலவுகளை சரி செய்துவிடலாம் என்று எண்ண வேண்டாம். கிராமசபை கூட்டங்களில் ஊராட்சியில் உள்ள வரவு-செலவு கணக்குகளை சமர்ப்பிக்க வேண்டும். அதேபோல் ஊராட்சிக்கு உட்பட்ட குக்கிராமங்களில் நடைபெறும் கிராம சபை கூட்டங்களிலும் இதே நிலை தொடர வேண்டும்" என்று, அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இந்த அறிவிப்பினை சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இதேபோல், ஆலங்குளம் அருகே உள்ள புதுப்பட்டி கிராமத்து இளைஞர்கள் சமூக வலைதளங்களில் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதில், சங்கரன்கோவில் ஒன்றியத்திற்குட்பட்ட பட்டாடைபட்டி கிராமத்தில், அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்று கூறி தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளனர். குருவிகுளம் ஒன்றிய பகுதிகளிலும் இதே போன்ற ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இளைஞர்களில் இந்த கெத்து காட்டும் செயல்களால், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு, மத்தியிலும் ஒரு விதமான கலக்கம் ஏற்பட்டுள்ளது. எது எப்படியோ கிராமத்து இளைஞர்களின் எண்ணங்கள் நிறைவேறினால், நேர்மையான ஒரு கிராம ஊராட்சி அமையும் என்று பொதுமக்களும் இதை ஆமோதிக்கின்றனர்.

Updated On: 20 Sep 2021 7:14 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  2. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  3. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    தாலியில் கருப்பு மணிகள் சேர்த்து அணிவது ஏன் என்று தெரியுமா?
  6. இந்தியா
    பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் அமைச்சர் ஆலம்கீர் ஆலம் கைது
  7. லைஃப்ஸ்டைல்
    என்னுயிரில் வாழ்பவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  8. உலகம்
    ஸ்லோவாக்கியாவின் பிரதமர் மீது பலமுறை சுடப்பட்டதையடுத்து, உடல்நிலை...
  9. உலகம்
    மாற்றியமைக்கப்பட்ட பன்றி சிறுநீரக மாற்று சிகிச்சையைப் பெற்றவர் மரணம்
  10. வீடியோ
    கலை அறிவியல் கல்லூரிகளில் அலைமோதும் கூட்டம் | இது தான் காரணமா ?TNGASA...