Begin typing your search above and press return to search.
தென்காசி எஸ்.பி. ஆபீசில் கபசுர குடிநீர் வழங்கல்
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், ஊழியர்கள், பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
HIGHLIGHTS
தென்காசி மாவட்டத்தில், கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க, மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது.
இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங் தலைமையில், மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரியும் காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்களுக்கு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விதமாக, கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது.
இலத்தூர் அரசு சித்த மருத்துவமனை மருத்துவர் தேவி மூலம், அனைவருக்கும் கபசுரக் குடிநீர் வழங்கி,உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தேவையான ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
இதேபோல், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு புகார் மனு அளிக்க வந்த பொதுமக்களுக்கும் கபசுர குடிநீர் வழங்கிப்பட்டது. கொரோனா வைரஸ் தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி, கொரோனா தொற்று பரவாமல் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டது.