பாவூர்சத்திரத்தில் கேஸ் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டம்
பாவூர்சத்திரத்தில் மகிளா காங்கிரஸ் சார்பில் எரிவாயு உருளைக்கு மாலை அணிவித்து நூதன முறையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
HIGHLIGHTS
பெட்ரோல், டீசல், விலை உயர்வு, சமையல் எரிவாயு விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் பல்வேறு கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் மகிளா காங்கிரஸ் சார்பில் எரிவாயு உருளைக்கு மாலை அணிவித்து நூதன முறையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி சேர்மக்கனி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பலர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. தொடர்ந்து பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்ந்து வருகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் பெருமளவில் உயர தொடங்கியுள்ளது. மேலும் என்னை பருப்பு வகைகளின் விலையும் உயர்ந்து வருகிறது. மத்திய அரசு அனைத்து விலை உயர்வையும் கட்டுப்படுத்தி சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் வர்த்தக காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியன், மாநில பேச்சாளர் ஆலடி சங்கரய்யா, வட்டாரத் தலைவர் சிங்கக்குட்டி, பிரபாகரன், தெய்வேந்திரன், அரவிந்த் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.