Begin typing your search above and press return to search.
குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
HIGHLIGHTS
கேரளாவில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இதனால் தென்காசி, செங்கோட்டை, குற்றாலம், கடையம், சுற்று வட்டாரப் பகுதிகளில் சார மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
குற்றாலம், பழைய குற்றாலம், புலியருவி, ஐந்தருவி என அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஊரடங்கு அமலில் உள்ளதால் குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மேலும் தண்ணீர் வரத்து அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.