/* */

குற்றாலம் அருகே குட்கா பதுக்கி வைத்திருந்த இருவர் கைது

குற்றாலம் அருகே புல்லுக்காட்டு வலசை பகுதியில், குட்கா பதுக்கி வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

குற்றாலம் அருகே குட்கா பதுக்கி வைத்திருந்த இருவர் கைது
X

தென்காசி மாவட்டம், குற்றாலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புல்லுக்காட்டு வலசை பகுதியில் ராஜேந்திரன் என்ற நபர் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறை ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் சார்பு ஆய்வாளர் சண்முகவேல் தலைமையிலான காவலர்கள் இணைந்து, தேடுதல் வேட்டை நடத்தினர்.

இதில், சட்டவிரோதமாக குட்கா பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த புல்லுக்காட்டு வலசை பகுதியை சேர்ந்த சுடலை என்பவரின் மகன் ராஜேந்திரன் (60) என்ற நபர் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூபாய் 37 ஆயிரம்மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல், சாம்பவர் வடகரை காவல் எல்லைக்குட்பட்ட எஸ்.பி.புரம் பேருந்து நிலையம் அருகே, சட்டவிரோதமாக புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்திருந்த மத்தளம்பாறை பகுதியை சேர்ந்த, குத்தாலிங்கம் என்பவரின் மகன் பழனி (38) என்பவர் மீது, சார்பு ஆய்வாளர் முத்து கிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து, கைது செய்தார். அவரிடம் இருந்து ரூபாய் 11 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Updated On: 19 Sep 2021 5:00 AM GMT

Related News

Latest News

  1. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் முயல் வேட்டையாடிய 10 பேர் கைது ரூ.1 லட்சம் அபராதம்
  2. லைஃப்ஸ்டைல்
    கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே - திருமண நாள் வாழ்த்துக்கள்
  3. கோவை மாநகர்
    கோவையில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு மர்ம நபர்கள் தீ...
  4. லைஃப்ஸ்டைல்
    முத்தாக முதலாண்டு திருமணநாள்..! வாழ்த்துவோமா..?
  5. ஈரோடு
    ஈரோடு வேளாளர் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியில் "உத்பவ் 2024"...
  6. லைஃப்ஸ்டைல்
    நீ எங்கே என் அன்பே, நீயின்றி நான் எங்கே? - மனைவியை காணவில்லை...
  7. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  8. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை:...
  9. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  10. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்