ஈரோடு வேளாளர் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியில் "உத்பவ் 2024" கலைவிழா
Erode news- ஈரோடு வேளாளர் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியில் "உத்பவ் 2024" கலைவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது.
HIGHLIGHTS
Erode news, Erode news today- ஈரோடு வேளாளர் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியில் "உத்பவ் 2024" கலைவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது.
ஈரோடு வேளாளர் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியில் "உத்பவ் 2024" கலைவிழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு, வேளாளர் கல்வி அறக்கட்டளையின் தலைவர் சி.ஜெயக்குமார் கலந்து கொண்டு தலைமையுரை ஆற்றினார். பள்ளியின் தாளாளர் எஸ்.டி. சந்திரசேகர் வரவேற்புரை ஆற்றினார். இதில் பொருளாளர் பி.கே.பி.அருண் மற்றும் துணை செயலர் எஸ்.நல்லசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில், பள்ளியின் ஆலோசகர் சி.பாலசுப்ரமணியம், எம்.யுவராஜ் மற்றும் வேளாளர் கல்வி அறக்கட்டளையின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக ஷியாமளா ரமேஷ்பாபு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் பள்ளியின் முதன்மை முதல்வர் ஆர்.நல்லப்பன், எஸ்.பிரேமலதா ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
இவ்விழாவில், பள்ளியின் முதல்வர் வி.பிரியதர்ஷினி ஆண்டறிக்கை வாசித்தார். கலை நிகழ்ச்சியின் இறுதியாகத் துணை முதல்வர் ஆர்.மஞ்சுளா நன்றியுரை வழங்கினார். இதில் மக்கள் தொடர்பு அலுவலர் எம்.கார்த்திகேயன், ஆசிரிய ஆசிரியைகள், ஆசிரியரல்லாப் பணியாளர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.