அய்யாபுரம் பள்ளியில் புதிய வகுப்பறை கட்ட ஆட்சியரிடம் திமுக நிர்வாகி மனு
பள்ளியின் வகுப்பறை கட்டுவதற்கு மாவட்ட ஆட்சியரிடம் தென்காசி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் மனு அளித்தார்.
HIGHLIGHTS
பள்ளியின் வகுப்பறை கட்டுவதற்கு மாவட்ட ஆட்சியரிடம் தென்காசி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் மனு அளித்தார்.
தென்காசி ஒன்றியம் அய்யாபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 198 மாணவ மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் உள்ள கட்டிடம் மிகவும் பழுதடைந்து நிலையில் இருந்ததால் அது இடிக்கப்பட்டது. கட்டிடத்தில் பயின்ற 82 மாணவ-மாணவிகள் தற்போது போதுமான வகுப்பறைகள் இல்லாததால் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்கி பயின்று வருகின்றனர். முகூர்த்த நாட்களில் திருமண மண்டபத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் மாணவ-மாணவிகள் கல்வி கற்க இடமின்றி மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
ஆகையால் மாவட்ட ஆட்சியரின் பொது நிதியிலிருந்து புதிய வகுப்பறை கட்டித் தரவேண்டும் என தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் சிவ பத்மநாதன் பரிந்துரையின் பேரில் தென்காசி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் குத்துக்கல்வலை அழகுசுந்தரம், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் மாரிமுத்து, மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் வல்லம் செல்வம், கிளைச் செயலாளர்கள் சிவன்பாண்டியன், செல்வகுமார் ஆகியோர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.