Begin typing your search above and press return to search.
காவல்துறை அதிகாரிக்கு சேமநல நிதி வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
தென்காசியில் காவல் அதிகாரிகள், காவலர்கள் உட்பட 32 நபர்களுக்கு சேமநல நிதியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வழங்கினார்.
HIGHLIGHTS
தென்காசி மாவட்டம், உடல்நலக்குறைவால் மருத்துவ சிகிச்சை பெற்ற காவலர்களும், பணியின் போது உயிரிழந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் குடும்பத்தினருக்கு சேமநல நிதியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வழங்கினார்.
போலீசார் குடும்பத்தினர் இறப்பிற்கான ஈமசடங்கு நிவாரண நிதியும், காவலர் சேமநலநிதி உதவித்தொகையில் இருந்து வேண்டி மனு சமர்ப்பித்த காவல் அதிகாரிகள், காவல் ஆளிநர்கள் என 32 நபர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் காவலர் சேமநலநிதி உதவித்தொகையாக மொத்தம் ரூபாய் 6,18,096 வழங்கினார்