/* */

குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க கோரி பாஜக மனு

குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பாஜக சார்பில் மனு அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க கோரி பாஜக மனு
X

குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க கோரி, தென்காசி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த பாஜகவினர்.

கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் விதிக்கப்பட்ட தடை காரணமாக, தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவியில், கடந்த 19 மாதங்களாக சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. அருவிக்கு யாரையும் அனுமதிக்காததால், அங்குள்ள வியாபாரிகள், தங்கும் விடுதி உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள், பொதுமக்கள் என பல தரப்பினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், வியாபாரிகள் உள்பட பல்வேறு தரப்பு மக்களின் கோரிக்கை ஏற்று, விரைவில் குற்றால அருவியில் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டும் என்று தென்காசி பாஜகவைச் சார்ந்த முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் சங்கர சுப்ரமணியன் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

அதேபோல், கடையநல்லூர் நகராட்சி பகுதியில், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ், அனைவருக்கும் வீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி, தனியே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும், தென்காசி தைக்கா தெரு பகுதியில் அடிப்படை வசதிகள் கேட்டு, பாஜக சார்பில் மனு அளிக்கப்பட்டது.

Updated On: 13 Sep 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?