இறந்து 7 மாதம் ஆனவருக்கு கொரோனா உறுதி !
இறந்து ஏழுமாதம் ஆனவருக்கு கொரானா பரிசோதனை செய்யப்பட்டதாகவும், சென்னையில் வசிக்கும் பெண்ணுக்கு, தென்காசியில் கொரானா பரிசோதனை செய்ததாக பாசிட்டிவ் ரிப்போர்டும் கொடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுரண்டை காமராஜர் நகரை சேர்ந்தவர் வினோத்.இவர் கடந்த 6 வருடங்களாக சென்னையில் குடும்பத்தோடு வசித்து வருகிறார் . இவருடைய தந்தை அந்தோணிராஜ். இவர் கடந்த ஏழு மாதங்களுக்கு முன் இதய நோய் காரணமாக திருநெல்வேலி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது சிகிச்சையின் போது திருநெல்வேலியில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் கடந்த 18ம் தேதி வினோத்தின் தந்தையான மறைந்த அந்தோணிராஜுக்கும், வினோத்தின் மனைவிக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், பரிசோதனை முடிவு வரும்வரை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும் மெசேஜ் வந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மீண்டும் 19ம் தேதி தென்காசி கொரோனா கட்டுப்பாடு அறையிலிருந்து வினோத்தை அழைத்து, வினோத்தின் மனைவிக்கு கொரோனா பாசிட்டிவ் ஆகியுள்ளதாகவும், உடனடியாக அட்மிட் ஆக வேண்டுமென்றும் கூறியதைக் கேட்டு வினோத் அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து அவரிடம் பேசியவரிடம் தான் சென்னையில் இருப்பதாகவும். தென்காசியில் எந்த கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவித்தார்.இச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது ஆகவே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.