தென்காசியில் மேற்கு வங்க கலவரத்தை கண்டித்து பா.ஜ.க கண்டன ஆர்ப்பாட்டம்
தென்காசியில் மேற்கு வங்க கலவரத்தை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
HIGHLIGHTS
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் நடத்திய வன்முறை கண்டித்து தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சியினர் மற்றும் சங்பரிவார் அமைப்புகள் சார்பில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அதன் ஒரு பகுதியாக தென்காசி நகர பாரதிய ஜனதா கட்சி மற்றும் சங் பரிவார் அமைப்புகள் சார்பாக தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது..
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி துணை தலைவர் முத்துக்குமார் தலைமை வகித்தார்.. மேற்கு வங்க அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. நிகழ்ச்சியில் மண்டல் பார்வையாளர்ஆனந்தி முருகன்,நகர பொதுச் செயலாளர் ராஜ்குமார்,முன்னாள் நகர மன்ற உறுப்பினர்கள் கருப்பசாமி, சங்கரசுப்பிரமணியன், ஒன்றியஇளைஞர் அணி துணைத் தலைவர் அருணாச்சலபெருமாள்,இந்து முன்னணி மாவட்டசெயலாளர் இசக்கிமுத்து,விசுவ ஹிந்து பரிஷத் மாவட்ட பொறுப்பாளர் தளவாய் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.