சன்னியாசி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது!
சன்னியாசி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
HIGHLIGHTS
சன்னியாசியை கல் நாகர் சிலையால் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தென்காசி மாவட்டம் தென்காசியில் கடந்த 23.10.2023 ஆம் தேதி யானை பாலம் அருகே உள்ள கல் மண்டபத்தில் தங்கி இருந்த மேலப்புலியூரை சேர்ந்த சங்கரநாராயணன் என்பவரை நாகக் கல்லால் அடித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
இது சம்பந்தமாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு கஞ்சா அலி என்ற புறா அலி என்பவன் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். வழக்கில் தலைமறைவாக உள்ள இரண்டு குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வந்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கில் சம்பந்தப்பட்டு தலைமறைவாக இருந்துவந்த இவ்வழக்கின் இரண்டாது எதிரி தென்காசி ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்த கடற்கரை என்பவர் மகன் சுடலை குமார் வயது (23) என்பவரை தென்காசி காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் தனிப்படை சார்பு ஆய்வாளர் விஜயகுமார் காவலர்கள் ஆஷிக் அலி, சதாம் , அன்பு அனிபா மற்றும் சிவகுமார் ஆகியோர்கள் சகிதம் வாய்கால் பாலம் அருகே ரோந்து பணியின் போது சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த நபரை விசாரணை மேற்கொண்டதில் ஹவுசிங் போர்டு காலனி பகுதியைச் சார்ந்த சுடலை குமார் என்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து அவனை கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.