தென்காசி அரசு மருத்துவமனையில் ரூ.25 லட்சம் மதிப்பில் அதிநவீன புதிய படுக்கைகள்
Tenkasi Government Hospital -தென்காசி அரசு மருத்துவமனையில் 25 லட்சம் மதிப்பில் அதிநவீன புதிய படுக்கைகள் தொடங்கப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
Tenkasi Government Hospital -தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் அனைத்து உயர்தர சிகிச்சைகளுக்கும் அனைத்து மருத்துவ வசதிகளும் கூடிய வெண்டிலேட்டர் மானிட்டர் ஆக்சிஜன் கூடிய 20 தீவிர சிகிச்சை படுக்கை வசதியுடன் சுமார் 25 லட்சம் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டுள்ளது .
ஏற்கனவே 20 தீவிர சிகிச்சை பிரிவு சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. மேலும் புதிதாக தொடங்கப்பட்டுள்ள வார்டில் இருதய மார டைப்பு அனைத்து விஷமுறிவு பாம்பு கடி மற்றும் மூளைக்காய்ச்சல் போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்கக் கூடிய வசியுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த வார்டில் உள்ள அனைத்து படுகைகளும் தானியங்கி முறையில் இயங்கக் கூடியது. மேலும் நோயாளிகளே தாங்களாகவும் இயக்கும் முறையில் எளிதாக உள்ளது. முற்றிலும் குளிரூட்டப்பட்ட இந்த வார்டினை இணை இயக்குனர் மருத்துவர் கிருஷ்ணன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் உள்ளிட்ட இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2