/* */

தென்காசி மாவட்டத்தில் கார் சாகுபடிக்காக அணைகளை ஆட்சியர் திறந்து வைத்தார்

தென்காசி மாவட்டத்தில் கடனாநதி, இராமநதி, அடவி நயினார்கோவில், கருப்பாநதி ஆகிய நீர் தேக்கங்கள் உள்ளன.

HIGHLIGHTS

தென்காசி மாவட்டத்தில் கார் சாகுபடிக்காக அணைகளை ஆட்சியர் திறந்து வைத்தார்
X

தென்காசி மாவட்ட அனைகளான கடனாநதி, இராமநதி, அடவி நயினார்கோவில், கருப்பாநதி ஆகிய நீர் தேக்கங்கள் உள்ளன. இந்த நீர்தேக்கங்களில் இருந்து கார் சாகுபடிக்காக தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டிருந்தது.

கடனாநதி நீர் தேக்கத்தில் திருநெல்வேலி எம்.பி. ஞான திரவியம், மாவட்ட ஆட்சியர் சமீரன் ஆகியோர் பாசன வசதிக்காக தண்ணீர் திறந்தனர். கடனாநதி நீர்த்தேக்கத்தில் இருந்து வினாடிக்கு 125 கன அடியும், இராமநதி நீர் தேக்கத்தில் இருந்து வினாடிக்கு 60 கன அடியும், கருப்பா நதி நீர் தேக்கத்தில் இருந்து வினாடிக்கு 25 கன அடியும், அடவிநயினார்கோவில் நீர் தேக்கத்தில் இருந்து வினாடிக்கு 60 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து 140 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இதன் மூலம் மாவட்டத்தில் நேரடியாக 8225.46 ஏக்கர் பாசன பரப்பு பயன்பெறுகிறது. மேலும் இராமநதி நீர் தேக்கத்தை விரைவில் தூர்வார நடவடிக்கை எடுக்கபடும். என எம்.பி தெரிவித்தார்.

Updated On: 14 Jun 2021 6:35 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...