/* */

தென்காசியில் பெட்ரோல், டீசல்,விலை உயர்வை கண்டித்து நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

தென்காசியில் பெட்ரோல், டீசல், விலை உயர்வை கண்டித்து வாகனத்திற்கு பாடைகட்டி நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

HIGHLIGHTS

தென்காசியில் பெட்ரோல், டீசல்,விலை உயர்வை கண்டித்து நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
X

பெட்ரோல், டீசல், விலை உயர்வை கண்டித்து தென்காசியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் காதர் மைதீன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் கலந்து கொண்டார். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் இருசக்கர வாகனங்களை இயக்க முடியாத சூழ்நிலை நிலவி வருவதை தெரிவிக்கும் வகையில் இரு சக்கர வாகனத்திற்கு பாடை கட்டப்பட்டு கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தின் இடையே சட்டமன்ற உறுப்பினர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

விவசாய சட்டத்தை எதிர்த்து விவசாயிகள் கடந்த ஒரு வருட காலமாக போராடி வருகின்றனர். ஆனால் மத்திய அரசைக் கண்டு கொள்வதில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் பெட்ரோல் ரூ 35க்கு விற்பனை செய்வோம் என்று தெரிவித்தார்கள். ஆனால் தற்போது 100 ரூபாயை எட்டியுள்ளது. 300 ரூபாய்க்கு விற்ற எரிவாயு உருளை தற்போது ரூ.950 விற்பனை செய்யப்படுகிறது.

இதுபோன்ற விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகின்றன. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மத்திய அரசின் தவறான அணுகுமுறையினால் தமிழகத்தில் கொரோனா இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்திய அரசு வல்லரசாக மாற ஆட்சி மாற்றம் வேண்டும். எனவே வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களியுங்கள் என்றும், மத்திய அரசு உடனடியாக பெட்ரோல், டீசல்,விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் அவர் தெரிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் முரளிராஜா, மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் சுப்பையா, நகர இளைஞரணி தலைவர் சந்தோஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

#இன்ஸ்டாநியூஸ் #தமிழ்நாடு #தகவல் #பெட்ரோல் #டீசல் #விலை #உயர்வு #நூதனஆர்ப்பாட்டம் #diesel #petrol #priceup #increase #gain

Updated On: 11 Jun 2021 7:03 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு தேசத்து இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  4. லைஃப்ஸ்டைல்
    தமிழ் SMS மூலம் பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோமா?
  5. வீடியோ
    PT Sir-க்கும் 😍💖English Teacherக்கும் காதல் ! கல்யாணம் செஞ்ச வச்ச...
  6. லைஃப்ஸ்டைல்
    நண்பா... என் இதயத்தில் எப்போதும் நீ இருப்பாய்! - பெஸ்டிக்கு பிறந்த...
  7. நாமக்கல்
    நாமக்கல்லில் 23ம் தேதி மண்புழு உரம் தயாரிக்க இலவச பயிற்சி
  8. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகை சுவாரஸ்யங்களும் வாழ்த்துக்களும்
  9. ஆன்மீகம்
    முதல் வணக்கம் எங்கள் முதல்வனுக்கு! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
  10. பட்டுக்கோட்டை
    கோடை பெருமழையில் இருந்து பயிர் பாதுகாப்பு..! விவசாயிகளே கவனிங்க..!