மக்கள் நடமாட்டம் இல்லை - குற்றாலம் அருவி அருகே புலி நடமாட்டம்.
ஊரடங்கு புலிகளுக்கு பொருந்தாதா?
HIGHLIGHTS
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வனவிலங்குகளான சிறுத்தை, புலி, மான், கடமான், காட்டுப்பன்றிகள், யானை உள்ளிட்ட மிருகங்கள் உள்ளன.
இவைகள் அவ்வப்போது விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களையும் வளர்ப்பு பிராணிகளையும் சேதப்படுத்தி வருகின்றன. இந்நிலையில் இன்று குற்றாலத்தில் வானத்திற்கு எதிரே உள்ள மலைப்பகுதியில் ராதா குண்டம் அருகே புலி ஒன்று ஆள் நடமாட்டம் இல்லாத சாலையில் வீதியுலா வந்துள்ளது.
இதனை அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் செல்போன் மூலம் படம் எடுத்து உள்ளனர். தற்போது குற்றால அருவியில் கொரோனா தொற்று காரணமாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் நடமாட்டம் இல்லாததால் வனவிலங்குகள் சுதந்திரமாக குற்றால அருவியை ஒட்டிய மலைப் பகுதியில் சுற்றித் திரிந்து தருகின்றன.புலிநடமாட்டம் குறித்து அறிந்த பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர்..தமிழகத்தில் ஊரடங்கு இங்குதான் முழுமை பெற்றிருக்கும் என காவலர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்கின்றனர்.