ஓட்டு கேட்டு வராதீங்க - பொதுமக்கள் வைத்த பேனரால் பரபரப்பு
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள மேலக்கலங்கலில் ஓட்டு கேட்டு வராதீங்க என்ற பேனரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சுரண்டை அருகே மேலக்கலங்கலில் தெருக்களில் வாறுகால் இல்லாததாலும் முறையாக அவற்றை பராமரிக்காததாலும் மழை நேரங்களில் சகதி ஏற்பட்டு நடக்கவே சிரமமாக இருப்பதாகவும் இதன் மூலம் நோய் பரவும் அபாயத்தில் வாழ்ந்து வருவதாகவும் அதிலும் ஆர்சி பள்ளி தெருவில் எப்போதும் நடக்க முடியாத அளவிற்கு தெருவில் சாக்கடை உள்ளதாகவும் ஊரின் கிழக்கு பகுதியில் அமைக்கப்பட்ட வாறுகாலில் தெற்கு பகுதியில் வாறுகால் இல்லாததுடன் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும் கீழக்கலங்கல் செல்லும் ரோட்டில் உள்ள வாறுகால் பாலம் நடுப்பகுதி சேதமடைந்து வாகனங்கள் சிரமத்துடன் செல்வதாகவும் கூறி ஆர்சி பள்ளி தெருவை சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு அடிப்படை வசதி செய்து தராததால் போட்டோவுக்கு வாக்களிக்க இருப்பதாகவும் ஆகவே வேட்பாளர்கள் யாரும் ஓட்டு கேட்டு வரவேண்டாம் என பேனர் வைத்துள்ளனர். இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.