Begin typing your search above and press return to search.
குற்றால அருவிகளில் பொதுமக்கள் குளிக்கத்தடை
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு காவல்துறையினர் தடை விதித்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் நேற்று காலை முதல் கனமழை பெய்ததை தொடர்ந்து பிரதான அருவியான மெயின்அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, உள்ளிட்ட அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க காவல்துறையினர் தடை விதித்துள்ளனர்.மேலும் தொடர் மழை பெய்து வருவதினால் அருவி கரை பகுதிகளில் வெறிச்சோடி காணப்படுகிறது.