/* */

மழையால் வீடுகள் இடிந்து விழுந்தது

தொடர் மழை சுரண்டை பகுதியில் இரண்டு வீடுகள் இடிந்து விழுந்தது

HIGHLIGHTS

மழையால் வீடுகள் இடிந்து விழுந்தது
X

வீரகேரளம்புதூர் தாலுகா சுரண்டை சிவகுருநாதபுரம் சந்தை பஜாரில் வசித்து வரும் சிதம்பரம் மகன் ராமர் என்பவருக்குச் சொந்தமான வீட்டின் மாடியின் கிழக்குப் புற சுவரின் சுண்ணாம்புக் காரையானது தற்போது பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக பெயர்ந்து விழுந்து சேதமடைந்துள்ளது. ஓடுகளால் ஆன மாடியின் சம்பாரம் ஒரு பக்கமாக கீழிறங்கி உள்ளது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அதில் குடியிருந்து வந்தவர் காயமின்றி தப்பினர்.

இதேபோல் இடையார்தவணை வடக்குத்தெருவில் திருமலை என்பவருக்கு சொந்தமான மண் சுவரிலான ஒரு அறை கொண்ட ஒட்டு வீட்டில் மாடசாமி மனைவி கோமதியம்மாள் என்பவர் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக வாடகைக்கு குடியிருந்து வருகிறார். இந்நிலையில் வீடு தற்போது பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக முழுவதுமாக இடிந்து விழுந்து சேதம் அடைந்துள்ளது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த வருவாய் ஆய்வாளர் மாரியப்பன் வீட்டில் குடியிருந்தவர்களை மாற்று இடத்தில் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்தார்.

Updated On: 15 Jan 2021 6:09 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...