சிவகங்கை மாவட்டத்தில் பட்டா மாறுதல் தொடர்பான சிறப்பு முகாம்
சிவகங்கை மாவட்டத்தில் பட்டா மாறுதல் தொடர்பான சிறப்பு முகாம் நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
HIGHLIGHTS
சிவகங்கை மாவட்டத்தில் இன்று (02-02-22) பட்டா மாறுதல் தொடர்பான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அரசின் சேவைகள் பொதுமக்களின் இருப்பிடத்திற்கு கொண்டு செல்லும் அரசின் கொள்கையின் ஒரு அங்கமாக ஒவ்வொரு வருவாய் கிராமத்தில் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் கணினி திருத்த சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
ஒவ்வொரு வாரமும் புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் இம் முகாம் நடைபெறும். அதனடிப்படையில் இன்று தேவகோட்டை வட்டம் சிறுகனூர் கிராமத்திலும், காரைக்குடி வட்டம் ஜெயங்கொண்டான் கிராமத்திலும், திருப்பத்தூர் வட்டம் சிராவயல் கிராமத்திலும், சிங்கம்புணரி வட்டம் மேலவண்ணாரிருப்பு கிராமத்திலும், சிவகங்கை மாவட்டம் புதுப்பட்டி கிராமத்திலும், காளையார்கோவில் வட்டம் சேதாம்பல் கிராமத்திலும், இளையான்குடி வட்டம் குமார குறிச்சி கிராமத்திலும், மானாமதுரை வட்டம் கட்டிக்குளம் கிராமத்திலும், திருப்புவனம் வட்டம் பொட்ட கானூர் கிராமத்திலும், சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
எனவே பொதுமக்கள் முகாமில் கலந்துகொண்டு பட்டா தொடர்பான தங்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்த பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டது.