/* */

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர் குறைதீர் முகாம்

முன்னாள் படை வீரர்களுக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது

HIGHLIGHTS

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர் குறைதீர் முகாம்
X

பைல் படம்

சிவகங்கையில் முன்னாள் படைவீரர்களுக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், முன்னாள் படை வீரர் நலத்துறையின் சார்பில், முன்னாள் படைவீரர்கள் ஃ சார்ந்தோர்கள் மற்றும் படைப்பணியில் பணிபுரியும் படை வீரர்களைச் சார்ந்தோர்களுக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ப.மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், சிவகங்கை மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள், சார்ந்தோர்கள் மற்றும் படைப்பணியில் பணிபுரியும் படை வீரர்களைச் சார்ந்தோர்கள் வீட்டுமனைப்பட்டா கோருதல், வேலைவாய்ப்பு கோருதல், இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் நிலம் கோருதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 21 நபர்கள் மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர். மேலும், முன்னாள் படைவீரர்கள் நலத்துறையின் சார்பில், முன்னாள் படைவீரர்களின் குடும்பத்தினருக்கு புத்தக கையேட்டினை தயாரித்து வழங்கிட ஆட்சியர் உத்தரவிட்டார்.

கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட ஆட்சியர் மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், முன்னாள் படை வீரர்கள் நலத்துறையின் சார்பில் கல்வி உதவித்தொகையாக 11 முன்னாள் படைவீரர்கள் குழந்தைகளுக்கு ரூ.2,70,00-க்கான மானிய அனுமதி ஆணையினை மாவட்ட ஆட்சியர் ப.மதுசூதன் ரெட்டி வழங்கினார்.

இக்கூட்டத்தில், முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குநர் ரா.வரதராஜன், தனித்துணை ஆட்சியர் (சமூகப் பாதுகாப்புத்திட்டம்) மு.காமாட்சி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.கொ.நாகராஜபூபதி, முன்னாள் படைவீரர்கள், சார்ந்தோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 21 April 2022 4:15 AM GMT

Related News

Latest News

  1. வாகனம்
    வரே வா...வரப்போகுது ராயல் என்ஃபீல்டு கொரில்லா 450..! எக்கச்சக்க...
  2. இந்தியா
    மம்தா பானர்ஜிக்கு பாரத் சேவாஷ்ரம் சங்க துறவி நோட்டீஸ்
  3. டாக்டர் சார்
    அமைதியான எதிரி..! அமைதியான மாரடைப்பு..! உஷாரா இருக்கணும்ங்க..!
  4. அரசியல்
    'மேற்கு வங்க காங்கிரசை காப்பாற்றுவதே எனது போராட்டம்': கார்கேவிற்கு...
  5. உலகம்
    ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் உயிரிழப்பு..!
  6. விளையாட்டு
    ஆர்சிபி வீரர்களுடன் கைகுலுக்குவதைத் தவிர்த்த தோனி! தேடிசென்று...
  7. இந்தியா
    ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் ஆகியோர் பேரணியில் பேசாமல் வெளியேறியது...
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 318.30 மி.மீ மழை பதிவு