/* */

தேர்தல் பார்வையாளர் ஆய்வு

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை தொகுதியில் வேட்பு மனு தாக்கல் அலுவலகம் திடீர் ஆய்வு

HIGHLIGHTS

தேர்தல் பார்வையாளர் ஆய்வு
X

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை தொகுதியின் வேட்பு மனு தாக்கல் செய்யும் அலுவலகத்தில் இரண்டு சட்டமன்ற தொகுதிக்கான பொது தேர்தல் பார்வையாளர் ஆய்வு மேற்கொண்டார்.

மாவட்டத்தில் காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை என நான்கு சட்டமன்ற தொகுதிகள் உள்ள நிலையில் வருகிற சட்டமன்ற தேர்தலின் போது வேட்பாளர்களின் செலவு கணக்குகளை கண்காணிக்க 2 பார்வையாளர் மற்றும் பொது பார்வையாளர் 2 பேரும், காவல்துறையினரின் நடவடிக்கையை கண்காணிக்க ஒருவர் என மாவட்டத்தில் 5 கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் சிவகங்கை, மானாமதுரை தொகுதிகளை கண்காணிக்கும் பொது பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள முத்துகிருஷ்ணன் சங்கர நாராயனன் சிவகங்கை தொகுதிக்கு வேட்பு மனு தாக்கல் செய்யும் அலுவலகமான சிவகங்கை கோட்டாட்சியர் அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் அங்கு பணியில் இருந்த தேர்தல் அதிகாரிகளின் ஆவணங்களை சரிபார்த்தார். மேலும் அதிகாரிகளிடம் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்வது குறித்த பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

Updated On: 19 March 2021 2:14 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    2வது மாத திருமண வாழ்த்து மேற்கோள்கள்!
  2. அரியலூர்
    ஜெயங்கொண்டம் அருகே கொள்ளிடம் ஆற்றில் திரியும் முதலையால் பீதி
  3. லைஃப்ஸ்டைல்
    மந்திரப் புன்னகை, அது மகனின் புன்னகை! இதயத்தை நிறைக்கும் இனிமை
  4. க்ரைம்
    திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே கோவில் காவலாளி அடித்துக் கொலை
  5. லைஃப்ஸ்டைல்
    ஒரு மாத திருமண நாள் வாழ்த்துகள்: அன்பை வெளிப்படுத்தும் இனிய சொற்கள்
  6. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி விழா
  7. லைஃப்ஸ்டைல்
    பசுமை நிறைந்த நினைவுகளே! பள்ளி நட்பின் இனிய நினைவுகள்
  8. தேனி
    பணி நிரவல் கலந்தாய்வினை கை விட ஆசிரியர் சங்கம் அரசுக்கு கோரிக்கை
  9. சூலூர்
    தசைநார் சிதைவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ கிரிக்கெட் போட்டி
  10. திருவள்ளூர்
    திருவள்ளூர் கடம்பத்தூர் அருகே மத போதகரை அரிவாளால் வெட்டிய மகன்