/* */

தபால் வாக்குகள் குறித்து ஆலோசனை கூட்டம்

தபால் வாக்குகள் குறித்து ஆலோசனை கூட்டம்
X

சிவகங்கையில் தபால் வாக்குகள் குறித்து தேர்தல் அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் ஆணையமானது தபால் வாக்குகள் பதிவு செய்வதில் பல்வேறு கூடுதல் வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதிலும் குறிப்பாக கொரோனா வைரஸ் பரவல் உள்ள நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தேர்தல் நாளன்று சிகிச்சையில் இருப்பவர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்ய தபால் வாக்கு முறையை தேர்வு செய்யலாம் என அறிவுறுத்தியுள்ள நிலையில் அந்த வழிமுறைகளை கையாள்வது குறித்த ஆலோசனை கூட்டம் இன்று சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது.

இதில் தேர்தல் அலுவலர்கள் மற்றும் தபால் வாக்குப்பதிவு சிறப்பு குழுவில் இடம்பெறவுள்ளவர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். 80 வயதிற்கு மேற்பட்ட முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கொரோனா நோயாளிகள் ஆகியோருக்கு தபால் வாக்குகளை வழங்குவது மற்றும் அதனை சேகரிப்பது குறித்த வழிமுறைகளை எடுத்துரைக்கப்பட்டது. தேர்தல் அதிகாரிகளின் சந்தேகங்களுக்கு ஆட்சியர் பதிலளித்தார்.

Updated On: 12 March 2021 2:38 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  2. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  3. தென்காசி
    திமுக சார்பில் நீர் மோர் பந்தல் தொடங்கி வைத்த அமைச்சர் கே கே எஸ் எஸ்...
  4. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளில் கோவை காவல் துறையினர் வழக்குப்பதிவு
  5. குமாரபாளையம்
    குடும்ப வறுமையை பயன்படுத்தி சிறுநீரகம் விற்க மூளைச்சலவை..!
  6. திருவள்ளூர்
    தனியார் நிதி நிறுவன ஊழியர் மீது மிளகாய் பொடி தூவி அரிவாள் வெட்டு!
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 50 கன அடியாக அதிகரிப்பு
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. ஈரோடு
    மதுரையில் நாளை வணிகர் தின மாநாடு: ஈரோட்டில் இருந்து 4,000 பேர்...