சிப்காட் அருகே பெண் தீக்குளித்து தற்கொலை
சிப்காட் அடுத்த லாலாப்பேட்டையில் உடல்நலக்குறைவு காரணமாக பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்
HIGHLIGHTS
இராணிப்பேட்டை மாவட்டம், இராணிப்பேட்டை சிப்காட் அடுத்த லாலாப்பேட்டையை பஜார்தெருவைச்சேர்ந்த மணி என்பவரின் மனைவி வள்ளி(47) இவருக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில்உடல்நலக்குறைவு காரணமாக மனமுடைந்த வள்ளி கடந்த சில நாட்களுக்கு முன், அவரது மகளுக்கு தெரிவித்துவிட்டு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக்கொண்டார். அப்போது அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் வந்து தீயை அணைத்து ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜா அரசுமருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் அங்கு, வள்ளி சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து சிப்காட் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.