வன்னிவேடு பெரியார் நகர் நாகத்தம்மன் கோயிலில் ஆடிவிழா கொண்டாட்டம்.
வாலாஜா அடுத்த வன்னிவேடு நாகாத்தம்மன் கோயிலில் ஆடிவிழா கொண்டாட்டம் நடைபெற்றது.
HIGHLIGHTS
இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜப்பேட்டை அடுத்த வன்னிவேடு பெரியார்நகரில் உள்ள நாகாத்தம்மன் கோயிலில் ஆடித்திருவிழா விமரிசையாக நடந்தது.
விழாவில் ,காலை அப்பகுதியினர் அருகிலுள்ள பாலாற்றங்கரையில் இருந்து பூங்கரகத்துடன் பெண்கள் பால்குடமேந்தி பம்பை, மற்றும் மேளதாலங்களுடன் கோயிலுக்கு ஊர்வலமாக வந்தனர்.
பின்னர் ,நாகாத்தம்மனுக்கு பாலபிஷேகம் செயதனர். அதனைத்தொடர்ந்து, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்
பின்னர் அம்மன் கரகம் வீதியுலா சென்றதைத் தொடர்ந்து ஊர்மக்கள் பொங்கல் வைத்து கூழ்வார்த்தனர் . முன்னதாக அம்மனுக்கு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி, தொடர்ந்து அம்மன் வர்ணிப்பு நடந்தது .
விழாவில் முக்கிய நிகழ்வாக உற்சவர் விசேஷ அலங்காரத்தில் வீதியுலா வந்தார். விழாவில் சுற்றுவட்டார பகுதியினர் திரளாக கலந்து கொண்டு அம்மனை வழிபட்டுச்சென்றனர்.