Begin typing your search above and press return to search.
வாலாஜா அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி தோல் கம்பெனி ஊழியர் பலி
வாலாஜாப்பேட்டை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி தோல் கம்பெனி ஊழியர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்
HIGHLIGHTS
இராணிப்பேட்டை மாவட்டம் ,சோளிங்கர், கேகவனாங் குப்பத்தைச் சேர்ந்த சிவபாதம். இவர் இராணிப்பேட்டையிலுள்ள தனியார் தோல் கம்பெனியில் பணியாற்றி வந்தார்..
அவரது பைக்கில் வேலை முடித்து சோளிங்கருக்கு புறப்பட்டார். வழியில் வாலாஜாப்பேட்டை - சோளிங்கர் சாலையில் மருதாலம் கூட்ரோடு அருகே சிவபாதம் சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதியது. அதில் சிவபாதம் சம்பவ இடத்திலேயே பலியானர் .
விபத்து குறித்து தகவலறிந்த வாலாஜாபோலீஸார், வழக்கு பதிந்து சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், விபத்து ஏற்படுத்திய வாகனத்தை தேடிவருகின்றனர்.