கடன் பிரச்சினையில் ஓட்டல் அதிபர் ரயில் முன் விழுந்து தற்கொலை
வாலாஜாஅடுத்த வி.சி.மோட்டுரில் சீட்டுகட்டி பணம் ஏமாற்றியதால் கடன் பிரச்சினையில் சிக்கிய ஓட்டல் அதிபர் தற்கொலை செய்து கொண்டார்.
HIGHLIGHTS
இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை அடுத்த வி.சி மோட்டூரைச் சேர்ந்த விஜயன், என்பவர் அதேப்பகுதியில் ஓட்டல் நடத்தி வந்தார். மேலும் அவர், இராணிப்பேட்டையில் உள்ள தனியார் சீட்டு கம்பெனி ஒன்றில் 40லட்சத்திற்கு சீட்டு கட்டி வந்ததாகவும், முடிவடைந்த நிலையில் கட்டியப் பணத்தை நிறுவனம் விஜயனுக்கு திரும்பத் தராமல் ஏமாற்றியதாக்க் கூறப்படுகிறது.
இது குறித்து,அவர் பலமுறை ஊர் முக்கிய பிரமுகருடன் நேரில் சென்று கேட்டும் அலைக்கழித்து வந்துள்ளனர். மேலும் ,விஜயன் சீட்டுப்பணத்தை நம்பி பலருடன் கடன் வாங்கியதாக தெரிகிறது. இதனால்,நெருக்கடிக்கு ஆளாகிய விஜயன் நம்பிய பணம் வராமல் ஏமாற்றப்பட்டதாலும் கடன் கொடுத்தவர்களின் தொல்லையாலும் அதிக மனஉளைச்சலில் இருந்தார்.
இந்நிலையில் வழக்கம்போல விஜயன் ஓட்டலில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, கடன்காரர்கள் கடைக்கு வந்து பணத்தைக் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர்.இதனால் ,விரக்தியடைந்த விஜயன் வாலாஜா அருகே கொளத்தேரி ரயில் பாதைக்குச் சென்று அவ்வழியாகச் சென்ற ரயிலின் கீழ் தலைவைத்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த கோரச்சம்பவம் குறித்து தகவலறிந்த ரயில்வே போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.