/* */

பொன்னை, பாலாற்றில்100 தடுப்பு அணைகள்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி

பொன்னை ஆற்றங்கரையோர கிராமங்களில் ஏற்பட்டுள்ள மழைவெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட பின்னர் அமைச்சர் துரைமுருகன் பேட்டி

HIGHLIGHTS

பொன்னை, பாலாற்றில்100 தடுப்பு அணைகள்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி
X

செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் துரைமுருகன் 

இராணிப்பேட்டை மாவட்டத்தில் பொன்னை யாற்றங்கரையோர கிராமங்களில் ஏற்பட்டுள்ள மழைவெள்ள பாதிப்புகளை அமைச்சர்கள் துரைமுருகன், காந்தி பார்வையிட்டனர். ராணிப்பேட்டை, மாவட்டம் பொன்னையாறு, பாலாற்றில் 100 தடுப்பணைகள் கட்டப்படும் என அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

கன மழையினால், ராணிப்பேட்டை மாவட்டம், பொன்னையாறு கரையோர கிராமங்களான சீக்கராஜபுரம் , ஏகாம்பரநல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ளது மற்றும் மேல்பாடி தரைப்பாலம் உடைந்து 30 கிராமங்கள் துண்டிக்கப்பட்டது. அவற்றை, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கைத்தறி துறை அமைச்சர் காந்தி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

அப்போது அமைச்சர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது:

அ.தி.மு.க., ஆட்சியில் முறைகேடாக தரைப்பாலங்கள் கட்டப்பட்டதால், வெள்ளத்தை தாக்கு பிடிக்க முடியாமல் உடைந்துள்ளன. தண்ணீர் குறைந்த பிறகு தான், தரைப்பாலம், குளம் சேதமடைந்தது குறித்து கணக்கெடுத்து சீரமைக்கப்படும்.

இவ்வளவு மழை வரும் என்று நானும் நினைக்கவில்லை, நீங்களும் நினைக்கவில்லை. விரைவில் பொன்னையாறு, பாலாற்றில் 100 தடுப்பணைகள் கட்டப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Updated On: 26 Nov 2021 12:59 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து உண்பதின் அவசியம் என்ன..?...
  2. லைஃப்ஸ்டைல்
    10 ஆண்டு திருமண நாள் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. லைஃப்ஸ்டைல்
    காதல் கிளியே காதல் கிளியே, உன்னை நான் காதலிக்கலையே...! - மறைமுக...
  4. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் முயல் வேட்டையாடிய 10 பேர் கைது ரூ.1 லட்சம் அபராதம்
  5. லைஃப்ஸ்டைல்
    கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே - திருமண நாள் வாழ்த்துக்கள்
  6. திருவள்ளூர்
    ஆக்சிஜன் சிலிண்டருடன் மனு கொடுக்க வந்த நுரையீரல் பாதிக்கப்பட்ட நபர்
  7. கோவை மாநகர்
    கோவையில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு மர்ம நபர்கள் தீ...
  8. பொள்ளாச்சி
    ஆனைமலை ஆற்றில் கலக்கும் கழிவு நீருடன் மனு கொடுக்க வந்த சமூக ஆர்வலர்
  9. குமாரபாளையம்
    மதுக்கடை பார் ஊழியரை தாக்கியதாக அ.தி.மு.க. நகர செயலாளர் மீது புகார்
  10. ஈரோடு
    காலிங்கராயன்பாளையம் அனைத்து வணிகர்கள் சங்க பொதுக்குழு கூட்டம்