Begin typing your search above and press return to search.
பச்சை நிறத்தில் மாறிய கடல் நீர்: பாம்பன் மீனவர்கள் அச்சம்
பாம்பன் கடற்பகுதியில் கடல் நீர் பச்சை நிறத்தில் மாறியதால் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர்.
HIGHLIGHTS
மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடலில் சில மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. இந்த நிலையில் பாம்பன் கடற்பகுதிகளில் கடல் பச்சை நிறத்தில் மாறியதால் மீனவர்கள் அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகளிடம் கேட்டபோது:-
மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் காலநிலை மாற்றம் ஏற்படும் காரணத்தால் கடல் நீர் பச்சை நிறத்தில் மாறி உள்ளது. இதற்கு காரணம் நாட்டிலுக்கா சிம்டிலம் என்று செல்ல கூடிய கடல் பாசிகள் காரணமாக கடல்நீர் பச்சை நிறமாக மாறி விட்டதாகவும், மீனவர்கள் பயப்படும் அளவிற்கு எந்த வித மாற்றமும் ஏற்படவில்லை. இது தானாகவே சரியாகிவிடும் என மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.