ஜன.1 -ல் திட்டமிட்டபடி ரயில் மறியல் போராட்டம்: மீனவர்கள் அறிவிப்பு
இராமேஸ்வரத்தில் திட்டமிட்டபடி ஜனவரி 1-ஆம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படுமென மீனவர்கள் அறிவித்துள்ளனர்
HIGHLIGHTS
இராமேஸ்வரம் மீனவர்கள் தில்லி சென்று வெளியுறவுத்துறை அமைச்சரை சந்திக்க உள்ளதால் வேலை நிறுத்த போராட்டம் தொடரும் துறைமுக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்.
கடந்த டிசம்பர் 18ஆம் தேதி ராமேஸ்வரம் மண்டபம் ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை 69 மீனவர்களையும் 10 விசைப்பலகையும் கைது செய்த நடவடிக்கையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் டிசம்பர் 19 முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்து டிசம்பர் 22ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் திட்டமிட்டபடி, ஜனவரி 1ம் தேதி தங்கச்சிமடம் வலசை பகுதியில் மாலை 4 மணி அளவில் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் எனவும், அதற்கு முன்பு தில்லியில் வெளியுறவுத்துறை அமைச்சரை சந்திப்பதற்கு தமிழக அரசு தற்போது மீனவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும், இதற்கிடையில் இன்னும் இரு தினங்களில் ராமேஸ்வரம் மீனவர்கள் தில்லி சென்று வெளியுறவுத்துறை அமைச்சரை சந்திக்க உள்ளதால், அந்த மீனவர்களை சந்திப்பு நடக்கும் வரை ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும் என மீனவ சங்க கூட்டத்தில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.