பாம்பன் தெற்குவாடியில் நள்ளிரவில் தீவிபத்து: வீட்டிற்குள் உறங்கிய மூதாட்டி சாவு
பாம்பன் தெற்குவாடி பகுதியில் நள்ளிரவில் ஏற்பட்ட தீவிபத்தில் வீட்டிற்குள் உறங்கிய மூதாட்டி தீயில் கருகி உயிரிழந்தார்.
HIGHLIGHTS
இராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் தெற்குவாடி பகுதியில் உள்ள அந்தோணியார்புரத்தைச் சேர்ந்தவர் பிலோமினாள். இருக்கு வயது 75. கடந்த சில வருடங்களுக்கு முன் இவரது கணவர் உயிரிழந்ததால் பிலோமினாள் அதே பகுதியில் குடிசை வீடு ஒன்றில் தனியாக வாழ்ந்த வருகிறார். பிலோமினாளுக்கு 4 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர்.
இவர்களும் அதே பகுதியில் அருகருகே வீடுகளில் வசித்து வருகின்றனர். இரவு மழை பெய்ததால் பாம்பன் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் மண்ணெண்ணெய் விளக்கு ஏற்றி வைத்து மூதாட்டி பிலோமினாள் தனியாக குடிசை வீட்டில் தூங்கியுள்ளார்.
தூக்கத்தில் விளக்கை தட்டி விட்டதில் வீடு எதிர்பாராதவிதமாக தீப்பற்றி எரிந்தது. இதில் வீட்டுக்குள் உறங்கிய மூதாட்டி பிலோமினாள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல் போனதாக சொல்லப்படுகிறது. இதனால் மூதாட்டி வீட்டிற்குள் தீ காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மூதாட்டி உயிரிழந்தார். தற்போது பிலோமினாவின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரவில் தூங்கிய கொண்ருந்த மூதாட்டி தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.