ஜிகே.வாசன் பிறந்த நாள்: இராமநாதபுரத்தில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
இராமநாதபுரத்தில் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே.வாசன் பிறந்தநாள் விழா நடைபெற்றது.
HIGHLIGHTS
ஜிகே.வாசன் பிறந்த நாள்.தமாக மாவட்ட தலைவர் நாகேஸ்வரன் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.
ராமநாதபுரம் தமிழ் மாநில காங்கிரஸ் கிழக்கு மாவட்டத்தலைவர் நாகேஸ்வரன் தலைமையில் முன்னாள் மத்திய அமைச்சர், மாநிலங்களவை உறுப்பினர், தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே.வாசன் பிறந்தநாள் விழா நடைபெற்றது. மாவட்ட இளைஞரணி தலைவர் என்டி.முகேஷ்குமார், ராமநாதபுரம் நகர் பொறுப்பாளர் பாபா என்ற சங்கரநாராயணன், மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் செந்தில்குமார் முன்னிலை வகித்தனர்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் பிறந்தநாளை முன்னிட்டு ராமநாதபுரம் அரண்மனை கோட்டைவாசல் விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. கிழக்கு மாவட்ட தலைவர் நாகேஸ்வரன் தலைமையில் கட்சியின் மாவட்ட நகர நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து சாலையோர வியாபாரிகள், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். முன்னதாக அரண்மனையிலிருந்து சென்டர் பிளாக் வரை பேண்ட் வாத்தியங்கள் முழங்க ஜிகே வாசன் வாழ்க என்ற முழக்கத்துடன் தொண்டர்கள் ஊர்வலமாக சென்றனர்.
மாவட்ட தலைவர் நாகேஸ்வரன் கூறுகையில், மக்கள் தலைவர் என மக்களால் அழைக்கப்படும் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே.வாசன் பிறந்த நாளை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினோம். தலைவர் ஜிகே வாசன் நீண்டநாள் வாழ வேண்டும். மக்கள் பணியாற்ற வேண்டும் என பூஜைகள் நடத்தப்பட்டது என தெரிவித்தார். ராமநாதபுரம் வட்டார தலைவர்கள் மாரி, ஆறுமுகம், மண்டபம் வட்டாரம் மேற்கு ராஜேஷ்வரன், மாவட்ட மாணவரணி தலைவர் சேதுபதி, ராமேஸ்வரம் நகர தலைவர் ராமகிருஷ்ணன்,மாவட்ட செயலாளர் தர்மராஜ், ஆர்எஸ் மங்கலம் வட்டாரத் தலைவர் ஸ்டாலின், மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் சதீஸ்வரன், உச்சிப்புளி நகர் தலைவர் பட்டாணி, நகராச்சி ஊராட்சி மன்ற தலைவர் வெள்ளைச்சாமி, பெருங்குளம் பழனிகுமார், மற்றும் மாவட்ட வட்டார நகர நிர்வாகிகள் இளைஞரணி மாணவரணி சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் மாவட்ட, நகர நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.