Begin typing your search above and press return to search.
குளிக்க சென்ற மாணவர் நீரில் மூழ்கி பலி
இராமநாதபுரம் அருகே குளிக்க சென்ற மாணவர் நீரில் மூழ்கி பலியானார்.
இராமநாதபுரம் அருகே கீழச்சோத்தூரணி பகுதியை சேர்ந்தவர் திருமூர்த்தி. இவரது மகன் கிஷோர் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் இன்று பகல் ஒரு மணி அளவில் அப்பகுதியில் உள்ள ஊரணியில் குளிப்பதற்காக சென்றுள்ளார். ஆனால் குளிக்கும் போது ஆழமான பகுதியில் தவறி விழுந்து நீச்சல் தெரியாததால் நீந்தி வர இயலாமல் மூச்சுத்திணறி நீருக்குள் இழுத்துச் செல்லப்பட்டார்.இது குறித்து தகவலறிந்த இராமநாதபுரம் தீயணைப்பு மீட்புக்குழுவினர் அப்பகுதிக்கு விரைந்து வந்து தொடர்ந்து 2 மணி நேரத்திற்கும் மேலாக நீரில் மூழ்கி மாயமான மாணவர் கிஷோரை மிதவைகளை பயன்படுத்தி தீவிரமாக தேடி வந்தனர்.