புதுக்கோட்டை அருகே முன் விரோதம் காரணமாக இளைஞர் அடித்துக் கொலை
புதுக்கோட்டை அருகே பாதை தொடர்பாக ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
HIGHLIGHTS
புதுக்கோட்டை அருகே உள்ள மாங்கநாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரங்கராஜு என்ற ராஜா.இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவருக்கும் இடையே பாதை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இருவரும் உறவினர்கள்.
இந்நிலையில் இன்று மாலை ரங்கராஜ் என்ற ராஜா தனது வீட்டிற்கு காரில் வந்து கொண்டிருந்தார். அவரது ஊர் அருகே சாலையின் குறுக்கே மூங்கில் கம்பு ஒன்று இருந்துள்ளது.
இதனைக் கண்ட ராஜா காரை நிறுத்தி அந்த மூங்கில் கம்பை எடுத்து ஓரத்தில் போட முற்பட்ட போது அந்த பகுதி வழியே இருசக்கர வாகனத்தில் வந்த ராஜேந்திரன் மற்றும் அவரது நண்பர் முருகேசன் ஆகியோர் ராஜாவிடம் தகராறு செய்துள்ளனர்
இதனையடுத்து இருவரும் ஒருவருக்கு ஒருவர் அருகில் இருந்த பொருட்களை எடுத்து தாக்கி கொண்டனர்.
இதில் ராஜேந்திரன் ராஜாவின் தலையில் செங்கல் ஓட்டை எடுத்து அடித்ததாக கூறப்படுகிறது. இது நிலைகுலைந்து போன ராஜா சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்
ராஜேந்திரன் மற்றும் முருகேசன் ஆகியோர் அந்த பகுதியில் இருந்து தலைமறைவு ஆகினர்.
இதனையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ராஜாவை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். ஆனால் ராஜா பரிதாபமாக வரும் வழியிலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக கணேஷ் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.