/* */

புதுக்கோட்டையில் உலக தாய்ப்பால் வார விழா நிகழ்ச்சி

புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் உலக தாய்ப்பால் வார விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

புதுக்கோட்டையில் உலக தாய்ப்பால் வார விழா நிகழ்ச்சி
X

புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் உலக தாய்ப்பால் வார விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

உலக தாய்ப்பால் வார விழாவினை புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கமும், புதுக்கோட்டை ஸ்ரீ வைத்தீஸ்வரா மருத்துவமனையும் இணைந்து மருத்துவமனை வளாகத்தில் நடத்தியது. இதில் புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் தலைவர் பொறியாளர் பெர்லின் தாமஸ் தலைமை தாங்கினார்.

முன்னாள் தலைவர்கள் ஓவியர் ரவி, பொருளாளர் கதிரேசன், பொறியாளர் மதிவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்விற்கு புதுக்கோட்டை ஸ்ரீ வைத்தீஸ்வரா மருத்துவமனையின் இயக்குனர், குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் சுந்தர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

ரோட்டரி மண்டல ஒருங்கிணைப்பாளர் அந்தோணிசாமி, ரோட்டரி துணை ஆளுனர் சிவாஜி ஆகியோர் கௌரவ விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் குழந்தைகளுக்கு தாய்ப்பாலின் அவசியம் குறித்தும், பாலூட்டும் தாய்மார்களுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் குறித்தும் டாக்டர் சுந்தர் உரையாற்றினார்.

அதன்பிறகு பங்கேற்ற அனைத்து தாய்மார்களுக்கும் ஊட்டச்சத்து பொருட்களை விருந்தினர்கள் வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திட்ட இயக்குனர் முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தார். நிறைவில் சங்கத்தின் செயலாளர் பொறியாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.


Updated On: 7 Aug 2021 12:45 PM GMT

Related News