புதுக்குளம் கரையை தூய்மைப்படுத்தும் பணி: எம்எல்ஏ - நகர்மன்றத் தலைவர் தொடக்கம்
அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் நாட்டு நலப் பணித் திட்டம், புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் இணைந்து நடத்தினர்
HIGHLIGHTS
புதுக்குளம் கரையை தூய்மைப்படுத்தும் பணியை எம்எல்ஏ மற்றும் நகர்மன்றத் தலைவர் தொடக்கி வைத்தனர்.
அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் நாட்டு நலப் பணித் திட்டம், புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் இணைந்து புதுக்குள வளாகத்தில் நடைபாதை தூய்மைப் படுத்தும் பணி நிலைய முதல்வர் ராமர் தலைமையில் துவங்கியது.
புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்க தலைவர் டாக்டர் மாரிமுத்து தலைமை வகித்தார். நிலைய மேலாண்மை குழு உறுப்பினர் மாருதி. கண.மோகன் ராஜா, நகராட்சி துணை தலைவர் லியாகத் அலி, மற்றும் நகர செயலாளர் க.நைனா முகமது, நகராட்சி ஆணையர் நாகராஜன், நகராட்சி அலுவலர்கள் டாக்டர் கார்த்திக், ஜெய்சங்கர், கவுன்சிலர்கள் சந்தோஷ், காந்திமதி பிரேம்ஆனந்த், காதர்கனி, குமரகுரு, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் முத்துராஜா மற்றும் நகராட்சி தலைவர் திலகவதி செந்தில், ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார்.
இதில், மருத்துவமனை தகவல் தொடர்பு அலுவலர் கதிரவன், வழக்கறிஞர் சந்திரசேகரன், சிவகுமார், தயாளன், பயிற்சியாளர் கிருஷ்ணன் உதவி பயிற்சி அலுவலர்கள் நடராஜன், ரங்கராஜ், ரமேஷ் சத்யநாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கண் அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்காக பயனாளி ஒருவருக்கு புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் சார்பாக சங்க தலைவர் மாரிமுத்து ரூபாய் ஐந்தாயிரம் வழங்கினார். கல்லூரி மாணவர்களுடன் புதுக் குளத்தை புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் முத்துராஜா புதுக்கோட்டை நகர மன்றத் தலைவர் திலகவசிசெந்தில் உள்ளிட்ட ரோட்டரி சங்க நிர்வாகிகள் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். முன்னதாக நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஜோதிமணி வரவேற்றார். இளநிலை பயிற்சி அலுவலர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.ஏற்பாடுகளை சங்க செயலாளர் தங்கராஜா, பொருளாளர் செந்தில்வேல் ஆகியோர் செய்தனர்.