கட்சி நிர்வாகிகளுக்கு பிரியாணி விருந்து வைத்த புதுக்கோட்டை எம்எல்ஏ
இன்று தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு கட்சி நிர்வாகிகளுக்கு பிரியாணி விருந்து வைத்த புதுக்கோட்டை எம்எல்ஏ மருத்துவர் முத்துராஜா
HIGHLIGHTS
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக திமுக கட்சிகள் இடையே புதுக்கோட்டையில் கடும் போட்டி நிலவியது இந்நிலையில் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட மருத்துவர் முத்துராஜா பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.
மேலும் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றதில் இருந்து புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வது பொதுமக்களிடம் தினம்தோறும் குறைகளை கேட்பது சட்டமன்ற அலுவலகத்திற்கு காலை, மாலை என சென்று சட்ட மன்ற அலுவலகத்தில் தன்னை சந்திக்க வரும் பொதுமக்களிடம் தங்களுடைய குறைகளை கேட்டறிந்து உடனடியாக குறைகளை நிவர்த்தி செய்து வருகிறார். மேலும் தனது தொகுதியில் பல்வேறு பணிகளை செய்து வருவதால் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜாவிற்கு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளார்.
இந்நிலையில் எம்எல்ஏவாக வெற்றி பெற்று மருத்துவர் முத்துராஜா இன்று தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை குடும்பத்துடன் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டார். மேலும் புதுக்கோட்டை மாவட்ட திமுக அலுவலகத்தில் உள்ள முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
பின்னர் புதுக்கோட்டை சட்டமன்ற அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளிடம் வாழ்த்துக்களை பெற்றுக் கொண்ட சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா கட்சி அலுவலத்தில் பந்தல் அமைத்து கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு பிரியாணி விருந்து வழங்கி சிறப்பித்தார்.
இதனால் இன்று புதுக்கோட்டை சட்டமன்ற அலுவலகம் கட்சி நிர்வாகிகள் புடைசூழ பரபரப்பாக காணப்பட்டது.