புதுக்கோட்டை:நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறு
புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 நகராட்சிகள் மற்றும் 8 பேரூராட்சிகளில் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
HIGHLIGHTS
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று நடைபெறுகிறது இதேபோன்று புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 2 நகராட்சிகள் மற்றும் 8 பேரூராட்சிகள் தேர்தல் நடைபெற்று வருகிரது. 187 பதவிகளுக்கு இந்தத் தேர்தலானது நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் 2 லட்சத்து 37 ஆயிரத்து 872 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர் இவர்கள் வாக்களிப்பதற்காக 187 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 67 வாக்குச்சாவடிகள் பதட்டம் நிறைந்ததாக கண்டறிப்பட்டு அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது வாக்குப்பதிவில் சிசிடிவி கேமரா மூலம் பதிவு செய்யப்படுகிறது.
புதுக்கோட்டை நகராட்சியை பொருத்த வரை 42 வார்டுகள் உள்ளன. இதில் 120 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 669 வாக்காளர்கள் உள்ளனர். இதேபோன்று அறந்தாங்கி நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன 37 ஆயிரத்து 638 வாக்காளர்கள் உள்ளனர் இவர்கள் வாக்களிப்பதற்கு 39 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 8 பேரூராட்சிகள் தலா 15 வார்டுகள் உள்ளது பொதுமக்கள் வாக்களிப்பதற்கு தலா 15 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் பாதுகாப்பு பணியில் 600க்கு மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.