/* */

பள்ளி மாணவிக்கு தொலைபேசியில் ஆபாச மிரட்டல்: பாேக்சாேவில் இளைஞர் கைது

புதுக்கோட்டையில் பள்ளி மாணவியிடம் தொலைபேசியில் ஆபாசமாக பேசி மிரட்டிய 19 வயது இளைஞர் பாேக்சாே சட்டத்தின்கீழ் கைது.

HIGHLIGHTS

பள்ளி மாணவிக்கு தொலைபேசியில் ஆபாச மிரட்டல்: பாேக்சாேவில் இளைஞர் கைது
X

பள்ளி மாணவிக்கு தொலைபேசியில் ஆபாசமாக பேசிய இளைஞர் முகமது ஷேக் கைது.

புதுக்கோட்டையில் பதினோராம் வகுப்பு மாணவியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசி மிரட்டிய 19 வயது முகமது ஷேக் என்ற இளைஞர் பாேக்சாே சட்டத்தின் கீழ் கைது.

புதுக்கோட்டையில் உள்ள அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு புதுக்கோட்டை அடப்பன்வயல் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞர் முகமது ஷேக் என்பவர் தொலைபேசியில் அடிக்கடி தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசியும் காதலிக்கவில்லை என்றால் உன்னைப் பற்றி தவறான தகவலை வெளியிடுவேன் என்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது .

இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் புதுக்கோட்டை கணேஷ் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் கணேஷ் நகர் போலீசார் பாேக்சாே சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து இளைஞர் முகமது ஷேக்கை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து பாேக்சாே சட்டத்தின் கீழ் பலர் கைது செய்யப்பட்டு வருவது பெண்களையும் அவர்களது பெற்றோர்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

Updated On: 24 Sep 2021 5:42 AM GMT

Related News

Latest News

  1. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  2. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  4. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  5. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  6. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  7. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  8. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  9. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  10. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...