பள்ளி கல்வித்துறை அமைச்சர் பிறந்தநாள்: நோட்டு, புத்தகம் வழங்கல்
பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் பிறந்தநாளை முன்னிட்டு, புதுக்கோட்டையில் மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன.
HIGHLIGHTS
தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சரும், மாவட்ட தலைமை உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றத்தின் தலைவருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி பிறந்தநாளை முன்னிட்டு, புதுக்கோட்டை அடப்பன்வயல் அருகே உள்ள ஸ்ரீ பாலதண்டாயுதபாணி முருகன் கோவிலில், உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றத்தின் நிர்வாகிகள் 30க்கும் மேற்பட்டோர் சிறப்பு அபிஷேகம் செய்தனர்.
பின்னர் அடப்பன்வயல் அருகே உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றத்தின் பத்தாம் ஆண்டு பெயர் பலகை திறப்பு விழா நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட மருத்துவ அணி துணை அமைப்பாளர் முத்துக்கருப்பன், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பெயர் பலகையை திறந்து வைத்து, கேக் வெட்டியும், பள்ளி மாணவ மாணவிகளுக்கு திருக்குறள் புத்தகங்களை வழங்கியும் கொண்டாடினர்.
இந்த நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாவட்ட உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றத்தின் நிர்வாகிகள் ஆலயம் ஆனந்தன், பஷீர் அகமது ராஜேஷ் கண்ணா, விஜய், மூர்த்தி, ஆரோக்கியதாஸ், முகமது ரிசா,சிவக்குமார் கிருஷ்ணா, சுதாகர் ஆலய பாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.