/* */

வீட்டிற்குள் புகுந்த 10 அடி நீள மலைப்பாம்பு : புதுகையில் பரபரப்பு

புதுக்கோட்டையில் இரவு நேரத்தில் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு வீட்டிற்குள் புகுந்ததால் பரபரப்பு நிலவியது.

HIGHLIGHTS

வீட்டிற்குள் புகுந்த 10 அடி நீள மலைப்பாம்பு : புதுகையில் பரபரப்பு
X

புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட பெக்சல் நகரில் ஒரு வீட்டில் இரவு நேரத்தில் 10 அடி நீள மலைப் பாம்பு உள்ளே புகுந்தது லாவகமாக பிடிக்க வனத்துறையினர்

புதுக்கோட்டை மச்சுவாடி அருகே பெக்சல் நகர் பகுதியில், பாலாஜி என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. இந்த வீட்டின் அருகே குளம் ஒன்றும் தைல மரக் காடும் உள்ள நிலையில், நேற்றிரவு, பாலாஜியின் வீட்டிற்குள் மலைப்பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதனால், அங்கு பரபரப்பு நிலவியது.

இதுகுறித்து அப்பகுதியினர், தீயணைப்பு துறையினர் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதனிடையே பாம்பு வீட்டைச்சுற்றி அங்கும் இங்கும் ஊர்ந்ததால், வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து அங்குமிங்கும் ஓடினர். இதனிடையே, அப்பகுதியைச் சேர்ந்த, மின்வாரிய தற்காலிக ஊழியர் சேகர் என்ற இளைஞர், துணிவோடு மலைப்பாம்பை பிடித்துள்ளார். பிடிபட்ட 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு சாக்குப்பையில் கட்டி அதன் பின் அங்கு வந்த வனத்துறையினரிடம் அந்த பாம்பு ஒப்படைக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Updated On: 2 Dec 2021 4:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  2. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  3. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  4. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  5. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  6. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  7. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  8. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  9. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  10. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை