Begin typing your search above and press return to search.
புதுக்கோட்டை கலைஞர் தமிழ் சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர்
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கலைஞர் தமிழ் சங்கம் சார்பில் பொது மக்களுக்கு கபசுர குடிநீர், முகக் கவசம் வழங்கப்பட்டது.
HIGHLIGHTS
புதுக்கோட்டை மாவட்ட கலைஞர் தமிழ் சங்கம் சார்பில் 14ம் தேதி முதல் 15 நாட்களுக்கு கொரோனா நோய்தடுப்பு விழிப்புணர்வுக்காக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து ஐந்தாவது நாளாக இன்று காலையில் அசோக் நகர் பேருந்து நிறுத்தத்தில் சுமார் 1,000 பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கினார்.இந்த நிகழ்வில் சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் சந்திரசேகரன், தொழிற்சங்க நிர்வாகி வேலுச்சாமி, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் செல்வராஜ் புளிட். திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.