Begin typing your search above and press return to search.
ஊதியம் வழங்காததால் ரகளையில் ஈடுபட்ட அரசு பள்ளி ஆசிரியை பணியிடை நீக்கம்
பள்ளியில் உள்ள கம்ப்யூட்டர் ஆவணங்கள் ஆகியவற்றை உடைத்து ரகளையில் ஈடுபட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகியது
HIGHLIGHTS
ஊதியம் வழங்காததால் ரகளையில் ஈடுபட்ட அரசு பள்ளி ஆசிரியை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டார்
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அரசு தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வருகிறார் தைலம்மை. இவர் ஆசிரியர் பணிக்கு சரியாக வராததால் அவரது சம்பளத்தை பள்ளி கல்வித்துறை நிறுத்தி வைத்தது.இதனைத் தொடர்ந்து அவர் தொடக்கப் பள்ளியில் உள்ள கம்ப்யூட்டர் ஆவணங்கள் ஆகியவற்றை உடைத்து ரகளையில் ஈடுபட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனைத்தொடர்ந்து ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாமி சத்தியமூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.