வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் கொலை; நகை கொள்ளை
புதுக்கோட்டையில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் கொலை செய்யப்பட்டார். 30 பவுன் நகை கொள்ளை
HIGHLIGHTS
புதுக்கோட்டை பொன்னகர் பகுதியில் வசித்து வருபவர் சிவகாமி, இவர் அரசு கலைக் கல்லூரியில் எம்.காம் முதலாமாண்டு படித்து வரும் அவரது மகள் லோகு பிரியாவுடன் வசித்து வருகிறார். மின்சார வாரியத்தில் வேலைபார்த்த அவரது கணவர் இறந்த பிறகு அவருடைய வேலையை கடந்த 7 ஆண்டுகளாக பார்த்து வருகிறார்.
நேற்று சிவகாமி வழக்கம்போல் மின்சார வாரியத்தில் பணி செய்துவிட்டு மாலை நேரத்தில் வீடு திரும்பியுள்ளனர். அப்போது வீட்டினுள் மகள் லோகு பிரியா ரத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கண்டு அதிர்ச்சி அடைந்த சிவகாமி கூச்சலிட்டு உள்ளார், இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் கணேஷ் நகர் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்,
தகவலறிந்து வந்த கணேஷ் நகர் காவல்துறையினர் வீட்டினுள் வந்து பார்த்த பொழுது லோகு பிரியா, மர்ம நபர்களால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும் வீட்டில் இருந்த பீரோவில் உள்ள 30 பவுன் நகையும் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
இதனையடுத்து காவல்துறையினர் கைரேகை நிபுணர்கள் வரவழைத்து கைரேகைகளை சேகரித்தனர். மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு அந்த பகுதி முழுவதும் பல்வேறு இடங்களுக்கு ஓடியது. காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
வீட்டில் தனியாக இருந்த இளம் பெண் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.