/* */

மத்திய அரசை கண்டித்து திமுகவினர் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் மக்கள் விரோத போக்கு, பெட்ரோல்-டீசல் விலை குறைப்பு, 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தப்பட்டது

HIGHLIGHTS

மத்திய அரசை கண்டித்து திமுகவினர் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்
X

புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மத்திய அரசைக் கண்டித்து திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும், பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும். மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். கேஸ் விலையை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்தும் தமிழகம் முழுவதும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் இன்று கையில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது. சமூக இடைவெளி விட்டு அவரவர்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏந்தி மத்திய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்ப வேண்டும் என்றும் திமுக கூட்டணி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் அவரவர் வீடுகளில் முன்பாக கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா தனது வீட்டுக்கு முன்பாக சமூக இடைவெளி விட்டு நின்று அவரது ஆதரவாளர்களுடன் மத்திய அரசு கண்டித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

இதேபோன்று, மாவட்ட திமுக அலுவலகத்தில் திமுக மற்றும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், கையில் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோன்று மாவட்டத்தின் அனைத்து தொகுதிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On: 20 Sep 2021 8:09 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  2. அண்ணா நகர்
    சென்னை ஐஐடி யில் மேஸ்ட்ரோ இளையராஜா இசை கற்றல் மற்றும் ஆராய்ச்சி மையம்
  3. திருப்பரங்குன்றம்
    செல்போன் முன்பதிவு இல்லாத பயண சீட்டுகள் விற்பனை இரு மடங்காக
  4. லைஃப்ஸ்டைல்
    பொண்ணு மாப்பிள்ளையை வாழ்த்துவோம் வாங்க..!
  5. வீடியோ
    நெல்லையை உலுக்கிய பயங்கர சம்பவம் | காதலி முன்னே கொடூரம் | Tirunelveli...
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    முன்னாள் படைவீரர்களுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் பலத்த மழை: கொடைக்கானலில், படகு போட்டி...
  8. லைஃப்ஸ்டைல்
    அன்பான கணவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்
  9. லைஃப்ஸ்டைல்
    'ஓருயிராய் வாழ்வோம் வா'..என அழைக்கும் திருமண வாழ்த்து..!
  10. லைஃப்ஸ்டைல்
    அன்பின் நண்பனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!